ஈரோடு செப் 14:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது வரை மாவட்டத்தில் 11.50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி கையிருப்பு தகுந்தார் போல் போடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சித்தோடு, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் உள்ளிட்ட 98 இடங்களிலும், ஈரோடு மாநகராட்சி பகுதியில் 26 இடங்களிலும் என மொத்தம் 140 இடங்களில் 30 ஆயிரம் பேருக்கு டோக்கன் அடிப்படையில்  கோவிஷீல்டு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.  இதுதவிர 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டது. மக்கள் காலையிலேயே ஆர்வத்துடன் அந்தந்த தடுப்பூசி போடும் முகாமிற்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தற்போது மாவட்டத்தில் அதிக அளவு தடுப்பூசி போடும் முகாம் நடந்து வருவதால் இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/