ஈரோடு நவ 5: 

ஈரோடு மாவட்டத்தில் சமீபகாலமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதேபோல் தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தடுப்பூசி போடும் பணி, கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மாவட்டத்தில் வேகமாக தாக்கம் குறைந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதார துறையினர் நேற்று வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 74 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 159 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் 70 வயது முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 688 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 726 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.tnhealth.tn.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/