ஈரோடு டிச 15:
அகில இந்திய அளவில் கேரளாவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிட்டிங் வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணியை அமைச்சர் முத்துசாமி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
அகில இந்திய அளவில் மூத்தோர் கான மாற்றுத்திறனாளிகள் பங்குபெறும் பத்தாவது அகில இந்திய சிட்டிங் வாலிபால் போட்டிகள், கேரள மாநிலம், உடுப்பியில் வரும் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு தமிழக அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தேர்வு செய்யப்பட்டு, அந்த அணிகளுக்கு பயிற்சி சென்னிமலை ஸ்ரீ ராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டுள்ளது.
இந்தப் போட்டிகளில் தேர்வு செய்யப்படக்கூடிய இந்திய அணி ஆசியா அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, விளையாட்டு வீரர் வீராங்கனைகளை பாராட்டி, வாழ்த்தி போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வழி அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாராலிம்பிக் வாலிபால் சங்கத்தின் மாநிலத் தலைவர் மக்கள்ராஜன், வீரர், வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்தார். அமைச்சர் பேசுகையில் , போட்டியில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய உடன் விளையாட்டு வீரர் வீராங்கனைகளை முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்வதாக வீரர்களை ஊக்குவித்து வாழ்த்தி வீரர்களை வழியனுப்பி வைத்தார். https://www.tnsva.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today