ஈரோடு ஆக 13:

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பழைய அரசு மருத்துவமனையில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஏ.எம்.சி. பல் நோக்கு மருத்துவமனையின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. தவிர, சென்னிமலை கூட்டுறவு நகர வங்கியில் 14 பயனாளிகளுக்கு ரூ.28.35 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு, தனியார் பங்களிப்புடன் காங்கேயம் தொகுதி சென்னிமலை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, முத்தூர், காங்கேயம், வெள்ளக்கோயில் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இன்றைய தினம் காங்கேயம் தொகுதியில் சுமார் 1,200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி  தனியார் பங்களிப்புடன் வழங்கப்படுகிறது. ஏ.எம்.சி., பல்நோக்கு மருத்துவமனை மற்றும் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசின் மூலமாகவும் படிப்படியாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் தடுப்பு மருந்தாக தடுப்பூசி உள்ளது.

அதன்படி இன்று முதல் தவணை தடுப்பூசி வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னிமலை கூட்டுறவு நகரவங்கியின் சார்பாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், 13 நபர்களுக்கு ரூ.18.35 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளையும், ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விபத்து காப்பீட்டு தொகை என மொத்தம் 14 நபர்களுக்கு ரூ.28.35 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெருந்துறை வட்டாட்சியர் கார்த்தி, திருப்பூர் ஏ.எம்.சி.மருத்துவமனை மருத்துவர் மரு.பிரபுசங்கர், இந்திய தொழில் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் வெங்கடேஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today