பவானிசாகர் ஆக 12:
பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த நாட்களாக மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கடந்த 14 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து, 100 அடியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து நேற்று குறைந்து, 552 அடியாக வந்தது. இந்நிலையில் இரவில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 100.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,504 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today