ஈரோடு நவ 29:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து இன்று ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 8 -ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்- 2, டிகிரி முடித்தவர்கள், பி.இ, எம்.இ, எம்.பி.ஏ, ஐ,டி, பாலிடெக்னிக், டிப்ளமோ, நர்சிங் படித்தவர்கள் என அனைவருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று உள்ளன. முகாமில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கொரோனா காலகட்டம் என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. கல்லூரியின் நுழைவாயில் அனைவருக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்கள் இளம் பெண்கள் தங்களது பெயர் முகவரி கல்வித்தகுதி குறித்து அங்கு பதிவு செய்து கொண்டனர். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்களது கல்வி தகுதிக்கு ஏற்ப போல் வேலைக்கான நேர்முக காணல் நடைபெற்று வருகிறது. தகுதியானவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பணி ஆணை வழங்கியது. https://www.tnprivatejobs.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/