ஈரோடு நவ 20:
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் 22ம் தேதி நடக்கிறது. அதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சி பாளையம், ஈங்கூர், பாலப்பாளையம், முகாசிபுடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம் பாளையம்,
பெருந்துறை ஆர்.எஸ்., 1010 நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவல் மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://www.tnebltd.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/