ஈரோடு நவ 26:

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 10 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது.

ஈரோடு மாவட்டத்திலும் இதுவரை நடந்து முடிந்த 10 கட்ட தடுப்பூசி முகாமில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் 11வது கட்ட தடுப்பூசி முகாம் இன்று ஈரோடு மாவட்டத்தில் தொடங்கியது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 437 மையங்களில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகர பொறுத்தவரை 50 இடங்களிலும், நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஈரோடு பஸ் நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் தடுப்பூசி போடாதவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/