ஈரோடு ஆக8:
ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏ.ஐ.டி.யு.சி.,யின் தமிழ்நாடு உள்ளாட்சிதுறை பணியாளர் சம்மேளத்தின் கூட்டம் திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்களை சந்தித்த எம்.பி., கே.சுப்பராயன் கூறியதாவது: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்கள். பிரதமர் மோடி அரசு, மடியில் கனம் இருப்பதால் வழியில் பயப்படுவதாக தெரிவித்த சுப்பராயன், மத்திய அமைச்சரவை மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக நடப்பதால் ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது என்றும் ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க வேண்டும்.
முரட்டு பிடிவாதத்தால் தான் நாடாளுமன்றத்தை முடக்கி உள்ளதாகவும், நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி என்றார்.
முறைகேடுகளை செய்வதற்காகவே திட்டங்கள் திட்டிய அரசு அ.தி.மு.க., அரசாகும். கடந்த அரசின் திட்டங்கள் குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும். பவானி ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை தமிழக அரசு நிறுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும், என்றார். மேலும் உள்ளாட்சி பணிகளை தனியாருக்கு தமிழக அரசு கொடுக்கக்கூடாது என்றார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today