ஈரோடு செப் 24:
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசேமூர் தென்றல் நகரில் இன்று மக்களை தேடி மருத்துவத் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடந்தது.விழாவுக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார்.
தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மக்களை தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் நம்முடைய மருத்துவத்துறையின் சார்பாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் வழிகாட்டுதலோடு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலை கொரோனா பாதிப்பு என்று ஒரு கட்டாய சூழ்நிலை இருந்தாலும் பொதுமக்களுக்கு குறிப்பாக நோயாளிகளாக இருக்கக்கூடியவர்கள் பயன்படுகிற வகையிலே அவர்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மக்களை தேடி மருத்துவம் என்ற ஒரு மகத்தான திட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அனேகமாக இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் இல்லாத ஒரு புதிய திட்டம் இதையெல்லாம் இன்றைக்கு அல்ல முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுது திட்டமிட்டு கொண்டே வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு இடத்திலும் அதற்கான வாகனத்தை ஏற்பாடு செய்து, ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு பேர், மூன்று பேர் சென்று வீடு வீடாக அவருக்கு யார் யாருக்கு மருந்து கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கிறார்கள். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அவர்கள் போய் மருந்து கொடுப்பார்கள். இடையிலே அவர்கள் ஒரு மாதம் சென்ற பின்னாலே நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து அவர்கள் தங்களை பரிசோதித்துக் கொண்டு மருந்துகளை பெற வேண்டும். ஒருவேளை பரிசோதனை அவசியம் இல்லை என்று சொன்னால் நம்முடைய செவிலியர்களை நேரடியாக நோயாளிகள் வீட்டிற்குச் சென்று அந்த மருந்தை கொடுத்துவிட்டு வருவார்கள். ஒரு நோய்க்காக மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் சிரமத்தின் காரணமாக பெறுவதுமான சங்கடங்களையும் வேறு விதமான நோய்களையும் அவரை சந்திக்க வேண்டிய நிலை இருந்தது. அதை எல்லாம் முழுமையாக இப்பொழுது தடுக்கப்பட்டிருக்கிறது.
இது நிச்சயமாக மிகப்பெரிய அளவிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல் வாழ்வை கொடுக்கிற திட்டமாக அமைகிறது என்பதையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நம்முடைய ஈரோடு மாநகரில் மட்டும் 5 லட்சத்து 42 ஆயிரத்து 530 மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் 5,277 பேர் பல்வேறு இணை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என பதிவு செய்துள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 182 பேர் ரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1521 ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 532 பேர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள். மக்கள் தேடி மருத்துவத் திட்டம் மூலம் இந்த நபர்கள் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் விஜயபாஸ்கர், பெரியசேமூர் பகுதி செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/