ஈரோடு நவ 27:

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் 96 சதவீதம் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களிலுள்ள பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சிகள், 547 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான கொடிவேரி அணையை நீர் ஆதாரமாக கொண்டு ரூ.227 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறியதாவது, கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராம

ஊராட்சிகள், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிகோவில், நல்லாம்பட்டி, பள்ளபாளையம், பெத்தாம்பாளையம் பேரூராட்சிகள், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 கிராம ஊராட்சிகள் திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் பயன்பெறுகின்றது.

மக்கள் தொகை பெருக்கம் மற்றும் குடிநீர் தேவைக்கேற்ப இப்புதிய கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக தனி நபருக்கு நாளொன்றுக்கு ஊரகப் பகுதிகளில் 55 லிட்டர் வீதமும், பேரூராட்சி பகுதிகளில் 135 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்பட உள்ளது. 2050ம் ஆண்டு மக்கள் தொகைக்கு பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 96 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். https://www.trawel.co.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/