ஈரோடு டிச 24:
கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் சத்தியமங்கலம் மலர் சந்தையில் இன்று மல்லிகைப் பூ விலை 805 ரூபாய் உயர்ந்து கிலோ, 2,117 ரூபாய்க்கு விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் மல்லிகை பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை தொடர்ந்து அதிகரித்து இன்று ஒரு கிலோ மல்லிகை பூ 2,117 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் முல்லை 1120 ரூபாய்க்கும், காக்கட்டான் 900 ரூபாய்க்கும், கோழி கொண்டை 145 ரூபாய்க்கும், ஜாதி முல்லை 750 ரூபாய்க்கும், 900 ரூபாய்க்கும், சம்பங்கி 80 ரூபாய்க்கும் விற்பனையானது. அனைத்து வகை பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். https://www.ssflowers.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today