பவானி செப் 21:
பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்கு உட்பட்ட எட்டிக்கொட்டை, தாளபாளையம், கூனாக்கபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறு, குறு விவசாயிகள் செவ்வாழை, கதலி, நேந்திரம் உள்ளிட்ட வாழை ரகங்களை பயரிட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக 50 ஏக்கர் பரப்பளவிலான 50 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், கதலி, செவ்வாழை, நேந்திரம் வாழை ரகங்களை பயிரிடப்பட்டிருந்தது.நேற்றிரவு பெய்த கன மழையால் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் அடியோடி சரிந்து விழுந்துள்ளது. இதனால் 2 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அறுவடைக்கு தாயார் நிலையில் இருந்த வாழைகள் சேதமடைந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/