ஈரோடு நவ 20:
கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி வருகின்ற 25ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்.
18 வயதிற்கு மேற்பட்ட 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்றும், பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/