ஈரோடு செப் 20:

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்தும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் தி.மு.க., தலைமையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியினர் இன்று கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில்  மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.,யுமான அந்தியூர் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் நகரச் செயலாளர் பொன்னுசாமி, லோகு சந்திரன், ராஜா என்கிற குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஈரோடு மாவட்ட கமிட்டியான ஜவஹர் இல்லத்தில் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறைத்தலைவர் சுரேஷ் தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி கருப்பு கொடி ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன கோசங்களை எழுப்பினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர்களான பி.ஏ.பெரியசாமி, மாரியப்பன், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மாவட்ட பொதுச்செயலாளர் ம.முகமது அர்சத், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய்கண்ணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 60 வார்டுகளிலும் தங்கள் வீடுகளின் முன்பாக கருப்புக் கொடி ஏந்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சம்பத் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் அந்தந்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/