ஈரோடு அக்.21:

ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்க – ஈடிசியா– பொதுக்குழு கூட்டம் தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் ராம்பிரகாஷ், துணை தலைவர்கள் ஸ்ரீதர், கந்தசாமி, பொருளாளர் பழனிவேல், இணை செயலாளர் சரவணபாபு உட்பட பலர் பேசினர்.

எஃகு, பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், ஜவுளி நுால் போன்றவற்றின் மூலப்பொருட்களின் அசாதாரண விலை அதிகரிப்பை, குறைக்கவேண்டும். காகித பொருட்கள், அட்டைகளுக்கான ஜி.எஸ்.டி., சமீபத்தில் 12 சதவீத்ததில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இது காகித தொழிலை கடுமையாக பாதிக்கும். காகித பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, மறுசுழற்சி செய்யலாம். எனவே ஜி.எஸ்.டி., உயர்வை திரும்பபெற வேண்டும். பழச்சாறு பொருட்கள், குளிர்பானங்களுக்கான ஜி.எஸ்.டி., அதிகரித்ததை திரும்பபெற வேண்டும். பேக்கிங் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது, மாற்று ஆதாரங்கள் இல்லாமல் தடை செய்யப்பட்டுள்ளது. பேக்கிங்குக்கான மாற்று பொருள் போர்க்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தை கோவை மற்றும் சேலத்தில் முன்மொழியப்பட்ட தொழில் வழிப்பாதை திட்டத்துடன் இணைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பிரச்னையை காரணம் காட்டி அதிகாரிகளால் பல தொழிற்சாலைகள் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அந்நடவடிக்கையை குறைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கான சூரிய மின் நிலைய திட்டம் கிளஸ்டர் மூலம் நடத்த வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கான ஏற்றுமதி முனையம் நிறுவப்படவேண்டும். பெருந்துறை சிப்காட்டில் ரயில் சரக்கு முனையும் நிறுவவேண்டும். தொழில் துறையில் பணியாளர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தப்படவேண்டும், என வலியுறுத்தினர். https://www.msmetamilnadu.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/