ஈரோடு சூலை 05:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தொண்டர் அணி செயலாளர் கணேசன் பேசினார்.
பெட்ரோல், டீசல், எரிவாயு, மின்சாரம், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். விவசாயம், விளை நிலங்களை பாதிக்கும் எவ்வகையான திட்டமாக இருந்தாலும், அதனை அனுமதிக்கக்கூடாது.
கொரோனா பரவலின் போது திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.முன்னதாக கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி நிருபர் ஈரோடு டுடே