ஈரோடு சூலை 6:
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வேட்டையம்பாளையம் காலனி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 3 மாத மான் குட்டியை நாய்கள் கடிதத்தில் உயிரிழந்தது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகததிற்கு உட்பட்ட பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வன பகுதிகளில் ஏற்பட வறட்சி காரணமாக சில மாதங்களாக வன விலங்குகள் அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் தண்ணீர் தேடியும் உணவு தேடியும் விவசாய நிலங்களை தேடி வந்து கொண்டுள்ளன. இவ்வாறு கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வேட்டையம்பாளையம் காலனி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தின் வாழை, கடலை, சோளம் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளன.
அந்த தோட்டத்தில் முகாமிட்ருந்த புள்ளி மான்களில் 3 மாதம் மதிக்கத்தக்க ஒரு ஆண் மான், தன் தாயை விட்டு பிரிந்து சென்றதால் அபகுதியில் உள்ள நாய்கள் கடித்து இறந்துள்ளது. இன்று காலையில் அந்த வழியாக விவசாய பணிகளுக்காக செல்லும் பொதுமக்கள் இறந்த கிடந்த மானை பார்த்துள்ளனர். டி.என்.பாளையம் வனதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் புள்ளிமனை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இறந்த குட்டியை இழந்த தாய், தனது குட்டிகளுடன் விவசாய தோட்டத்தில் அலைமோதி வருகிறது. விவசாய தோட்டத்தில் சுற்றி வரும் அந்த மான்களை பிடித்து வனப்பகுதில் விட அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே