ஈரோடு டிச 21:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர், உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல் துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 243 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடிநடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமரன், உதவி ஆணையர் (கலால்) ஜெயராணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ரங்கநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீனாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today