மொடக்குறிச்சி டிச 16:

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,775 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 93 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 111 ரூபாய் 25 காசுக்கும், சராசரி விலையாக 99 ரூபாய் 41 காசுக்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 98 ரூபாய் 10 காசுக்கும்,  சராசரி விலையாக 93 ரூபாய் 80 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தமாக 86 ஆயிரத்து 713 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 82 லட்சத்து 76 ஆயிரத்து 534 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார். கொடுமுடி அருகே உள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை காய் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 375 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக விலையாக 48 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 6 காசுக்கும், சராசரி விலையாக 69 ரூபாய் 60 காசுக்கும் ஏலம் போனது.

மொத்தம் 11 ஆயிரத்து  867 கிலோ எடையுள்ள நிலக்கடலைகாய் 7 லட்சத்து 45 ஆயிரத்து 870 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. மொடக்குறிச்சி உப விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 8,356 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 15 காசுக்கும் அதிகபட்ச விலையாக 31 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 29 ரூபாய் 76 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம்  2 ஆயிரத்து 885 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 82 ஆயிரத்து 709 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் தேங்காய் பருப்பு 44 மூட்டைகள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 93 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்ச விலையாக 109 ரூபாய் 59 காசுக்கும், சராசரி விலையாக 100 ரூபாய் 89 காசுக்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 50 ரூபாய் 00 காசுக்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 60 காசுக்கும், சராசரி விலையாக 64 ரூபாய் 10 காசுக்கு ஏலம் போனது.

மொத்தம் 1495 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 1 இலட்சத்து 30 ஆயிரத்து 281 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு 2 லட்சத்து 12 ஆயிரத்து 990 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today