மொடக்குறிச்சி நவ 5:

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி உப விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1937 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.  இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 27 ரூபாய் 75 காசுக்கும் அதிகபட்ச விலையாக 29 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 29 ரூபாய் 19 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம்  667 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 19 ஆயிரத்து 185 ரூபாய்க்கு விற்பனையானது. 

இதேபோல் தேங்காய்பருப்பு 31 மூட்டைகள் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 88 ரூபாய் 91 காசுக்கும், அதிகபட்ச விலையாக 102 ரூபாய் 00 காசுக்கும், சராசரி விலையாக 90 ரூபாய் 87 காசுக்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 52 ரூபாய் 86 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 85 காசுக்கும், சராசரி விலையாக 63 ரூபாய் 80 காசுக்கு ஏலம் போனது.

மொத்தம் 545 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 44 ஆயிரத்து 957 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் தேங்காய் மற்றும் தேங்காய்பருப்பு 64 ஆயிரத்து 142 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார். https://www.tnagrisnet.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/