ஈரோடு டிச 24:
ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மாற்றம் கொண்டு வருவது வழக்கம்.
இதேபோல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, நேபாளம், கோவா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகள் வாங்கிப் செல்வதும் வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு காரணங்களால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.
இதேபோல் சந்தையில் மாடுகள் வரத்தும் குறைந்தது. அதனால் வியாபாரமும் மந்தமாகவே நடந்து வந்தது. இந்நிலையில் இன்று கூடிய சந்தையிலும் வெளிமாநில வியாபாரிகள் வராததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது. இந்த கூடிய மாட்டுச்சந்தையில் பசு -300, எருமை 200, கன்று 50 என மொத்தம் 550 மாடுகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இன்றும் வெளிமாநில வியாபாரிகள் வராததால் மாடு விற்பனை மந்தமாகவே இருந்தது. https://www.agmarknet.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today