ஈரோடு நவ 5:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.
இங்கு கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து விடுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.78 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,922 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக மட்டும் 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/