ஈரோடு டிச 21:

பவானிசாகர் அணியின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணை கடந்த சில நாட்களாக 104 அடியில் தொடர்ந்து இருந்து வந்தது.

அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 3 நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.43 அடியாக உள்ளது. அணைக்கு 585 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. https://www.erode.nic.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today