ஈரோடு டிச 17:
பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாள் தண்ணீர் வரத்து கூடுவதும், ஒரு நாள் குறைவதுமாக அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த 3 நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.75 அடியாக உள்ளது. அணைக்கு 678 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அதேநேரம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை 105 அடியை நெருங்கி வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய் துறையினர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். https://www.erode.nic.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today