கோபிசெட்டிபாளையம் சூலை 31: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஆகஸ்ட் 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும், என வீட்டுவசதி துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.கோபிசெட்டிபாளையத்நில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த வீட்டுவசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, நகராட்சி பகுதியில் வசிப்பவர்களின் குடும்பத்தில் இறந்தவர்களுகான ஈமச்சடங்கு நிதி மற்றும் பயனாளிகளுக்கு உதவித்தொகையினை வழங்கினார்.பின், தமிழ்நாடு அரசு ஆசிரியர் கூட்டணி சார்பில் 2.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அரசு மருத்துவமணைக்கு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது:முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தொடர்ந்து மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் பெரிய திட்டங்களை செயல்படுத்த தமிழக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் 90 திட்டங்கள் துவக்குவதற்கு தேவையான பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி வரும் 3ம் தேதி அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படவுள்ள நிலையில் கொரான விதிமுறைகளை பின்பற்றி அனைத்து கட்சியினருக்கும் மரியாதை செலுத்த அரசு வழிமுறையை வகுத்துள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today