ஈரோடு நவ 11:
தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200-ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம் பட்டதாரிகளுக்கு ரூ.600-ம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600-ம், மேல்நிலை கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் வருகிற டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடையும் காலாண்டிற்கு, தகுதி உடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம்.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்து கொண்டு இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். பள்ளி, கல்லூரி கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும். அல்லது பெற்றோர், பாதுகாவலர் குறைந்தது 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்திருக்க வேண்டும்.
விண்ணபதாரர் எந்தவொரு நிதி உதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. என்ஜினீயரிங், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இதுபோன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி அற்றவர்கள்.விண்ணப்ப படிவங்களை என்ற இணையதளம் மூலமாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியும் பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் மகேஷ்வரி தெரிவித்து உள்ளார். https://www.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/