ஈரோடு ஆக 23:

கொரோனா பரவல் கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக மாவட்டத்தில் 2வது வாரமாக இன்று 24 இடங்களில் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த வாரம் முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், 2வது வாரமான இன்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர். கே. வி .ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதே போல மாவட்டத்தின் பிற பகுதிகளான பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை மூடப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today