ஆசனுார் ஆக 12:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அப்போது சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று காலை திம்பத்தில் இருந்து ஆசனூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிந்தது. யானை இருப்பது அறியாமல் வளைவில் திரும்பிய வாகன ஓட்டிகள் திடீரென ஒற்றை யானையை பார்த்து மிரண்டனர்.
சாலையை கடக்கும் பொழுது அந்த ஒற்றை யானை கார்களை துரத்தி தாக்க முயற்சித்தது. இதனை அவ்வழியாக வந்த மற்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திக் கொண்டனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யால் செல்ல வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today