ஈரோடு டிச 30:

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 253 வது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் மொடகுறிச்சியில் வைக்கப்பட்டு இருந்த திருவுருவ படத்திற்கு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சுற்றுலாதுறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: சுதந்திர போராட்ட வீரர்  பொல்லானுக்கு 1 கோடியே 83 லட்சம் ஒதுக்கீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து வந்த  புகாரின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 193 அரசு குடியிருப்புகளில், 60 இடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், அந்த 60 இடங்களை இடித்த விட்டு புதியதாக வீடுகள் கட்டப்படும், என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, அரசு தரமான குடியிருப்புகளை கட்டி கொடுத்தாலும் குடியிருப்புவர்கள் அதை நன்றாக பராமரிக்க வேண்டும், என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாவுக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், புதிய புதிய சுற்றுலாதளங்கள் கண்டறியப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்படும். மேலும் சுற்றுலாத்தறையின் தமிழ்நாடு ஓட்டல்களை லீசுக்கு தராமல் அரசே நடத்த ஏற்பாடு செய்து வருவதாக, தெரிவித்தார். https://www.mohua.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today