ஈரோடு நவ 23:

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 9 கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் 10 -வது கட்ட தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் 10 -வது கட்ட தடுப்பூசி முகாம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 800 மையங்களில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடந்தது. ஈரோடு மாநகர பொறுத்தவரை 50 இடங்களிலும், நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி போடும் பணி நடந்தது. 2 நாட்கள் நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/