ஈரோடு ஜூன் 2: ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீஸ்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது.ஈரோடு எஸ்.பி., தங்கதுரை தலைமை தாங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, அரிசி மற்றும் முக கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை போலீஸ்களுக்கு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது,பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கென தனியாக, 10 படுக்கைகள் தயார் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 289 போலீலார் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம்.கொரானா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளது. எனவே மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்கு முக்கியதுவம் அளித்து தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமையில் கொரானா நோயாளிகள் உட்பட அனைவரும் ஒரே வழியை பயன்படுத்துவதால் மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிக்கென தனி வழிகள் மற்றும் தனிவார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிருபர்.
ஈரோடு டுடே