ஈரோடு சூன் 13: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரானா பரவலல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டத்தையடுத்து சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டது.ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் துவங்கியது. இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனையானது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். விலையை குறைக்க வலியுறுத்தி வந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.97.76 க்கு விற்பனையானது. இரண்டு நாட்களுக்கு இதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 23 பைசா அதிகரித்து ரூ.97.99-க்கு விற்கப்பட்டது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டீசல் ஒரு லிட்டர் ரூ.92-க்கு விற்பனையானது. இன்று 21 பைசா அதிகரித்து டீசல் ஒரு லிட்டர் ரூ.92.21-க்கு விற்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நிருபர்.
ஈரோடு டுடே