ஈரோடு சூன்18: திருக்கோயில்களில் நிலையான ஊதியமின்றி பணி புரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சியர்கள், பூசாரிகளுக்கு கொரோனா நிவாரணத்தொகை மற்றும் நிவாரண பொருட்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய் மற்றும் 15 பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றி வரும், 743 பேருக்கு நிவாரண தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரானா கால நிவாரண உதவித்தொகை 4,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகை மளிகை பொருட்களை வழங்கினார்.அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி ஆணையர் அன்னகொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே